சிங்கப்பூரில் இனி கார், பைக் வாங்குவது ரொம்ப கஷ்டம்!
போக்குவரத்து நெரிசலைக்குறைக்க புது திட்டத்தைக் அறிமுகப்படுத்தும் சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கார்களின் பயன்பாட்டைக் குறைக்க அந்நாட்டின் அரசு முடிவு செய்துள்ளது.
வளர்ந்து வரும் சிங்கப்பூர் நகரம் தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வருகிறது. இதன் காரணமாக அங்கு ஆண்டு தோறும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மக்கள் பயங்கர போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் புதிய தீர்வொன்றை போக்குவரத்து இயக்குநகரம் அறிவிக்க இருக்கிறது. படிப்படியாக கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகளின் தனியார் பயன்பாட்டைக் குறைப்பதே அந்த புதிய ஐடியா.
சிங்கப்பூரில் வாகனங்கள் வாங்குவதற்கு ஏகக்கெடுபிடி இருந்தாலும், அங்கு வாகன விற்பனை அதிக அளவில் உள்ளது. டொயோட்டா கார் ஒன்றின் குறிப்பிட்ட மாடலின் சிங்கப்பூர் விலை அமெரிக்காவின் விலையை விட நான்கு மடங்கு அதிகம்.
இதனால், கார்களின் போக்குவரத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது அரசு. இதனை ஈடுகட்ட பொது போக்குவரத்தை ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் அதிகப்படுத்தும் துணைத்திட்டத்தையும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே சிங்கப்பூர் நிலப்பரப்பில் 12% சாலைகள் ஆக்கிரமித்து உள்ளதால், தொழில்நுட்ப விரிவாக்கத்தைக் கணக்கில் கொண்டு சாலைகளைத் திட்டமிட வேண்டியுள்ளது.
இனி வரும் ஐந்து ஆண்டுகளில் 28 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் செலவு செய்து சாலை, மெட்ரோ போக்குவரத்து முறைகள் சீரமைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications