பாகிஸ்தானில் நிர்வாணமாக ஓட்டப்பந்தயத்தில் ஓடிய 6 வாலிபர்கள் கைது
லாகூர்: பாகிஸ்தானில் நிர்வாணமாக ஓட்டப்பந்தயத்தில் ஓடிய 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கோரலி கிராமத்தில் இருந்து நாட் கிராமம் வரை ஓடும் ஓட்டப்பந்தயத்தை 6 வாலிபர்கள் நடத்தினர். இந்த பந்தயத்தில் ஆரிப், மஸ்கீன், அர்ஷத், வாக்கர், இஹ்சான் மற்றும் ஆபீத் ஆகிய 6 பேர் நிர்வாணமாக ஓடினர். யார் நிர்வாணமாக நாட் கிராமம் வரை ஓடி வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு ரூ. 20,000 பரிசு என்று அவர்கள் அறிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில் 6 வாலிபர்கள் நிர்வாணமாக ஓடுவதை பார்த்த கோரலி கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுதத்னர். போலீசார் விரைந்து வந்து அந்த 6 வாலிபர்களையும் கோரலி சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த பரிசுத் தொகையையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அந்த 6 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.