இலங்கை பிரதமர் பதவி.. மகிந்த ராஜபக்சேவை விட ரணிலுக்கே அதிக ஆதரவு: கருத்து கணிப்பு
கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவிக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை விட தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கே அனைத்து சமூகத்தினரிடத்தில் அதிக ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் மோதுகின்றனர்.

மகிந்த ராஜபக்சே மீண்டும் அரசியலுக்கு திரும்பியுள்ளதை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட அவரது சொந்த கட்சியினரே எதிர்க்கின்றனர். இந்த நிலையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்ற நிறுவனம் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
இந்த கருத்து கணிப்பில் இலங்கையின் அடுத்த பிரதமராவதற்கு ரணில் விக்கிரமசிங்கேவுக்கு 39.8% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக்சே பிரதமராவதற்கு 27.5% பேர்தான் ஆதரவு அளித்துள்ளனர்.
இலங்கையின் பிரதமராவதற்கு மிகவும் பொருத்தமானவர் யார் என்ற கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழர்கள் 62.3% வீதமும், இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் 71.2% வீதமும், முஸ்லிம்கள் 62.3% வீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சே பிரதமராவதற்கு தமிழர்கள் 1.8% வீதமும், மலையகத் தமிழர்கள் 1.2% வீதமும், முஸ்லிம்கள் 1.6% வீதமும் மட்டுமே ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஆனால் சிங்களவர்களில் 36% பேர் மகிந்த ராஜபக்சேவே பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் எனக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 31.9% சிங்களவர்கள் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
அனைத்து சமூகத்தினருடன் ஒப்பிடுகையில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கே கூடுதலாக 39.8% பேரின் ஆதரவு உள்ளது.
மேலும் இத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடக் கூடாது என்று 42% பேரும் போட்டியிடலாம் என்று 40% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ராஜபக்சே தரப்பு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications