Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலாளி உங்களுக்கு என்னாச்சு.. ஆஸ்பத்திரி வாசலில் கவலையுடன் காத்து கிடந்த 4 நாய்கள்

எஜமானனுக்காக ஆஸ்பத்திரி வாயிலில் நாய்கள் காத்து கிடந்தன.

Subscribe to Oneindia Tamil

பிரசிலியா: தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே கண்கலங்க வைத்துவிட்டன.

பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற நபர் தெருவில் போகும்போது அங்கிருக்கும் 4 நாய்களுக்கு சாப்பாடு தருவாராம். எப்பவும் இப்படி சாப்பாடு தருவது இல்லையாம்.

என்றைக்காவது அந்த வழியாக சென்றால், அதுவும் அந்த நேரத்தில் கையில் ஏதாவது சாப்பாடு இருந்தால் அந்த தெரு நாய்களுக்கு போடுவாராம். உடனே அந்த 4 நாய்களும் அதை சாப்பிட்டுவிட்டு வாலை ஆட்டுமாம்.

தாங்க முடியவில்லை

தாங்க முடியவில்லை

இந்த நிலையில் சீசருக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீசர் இப்படி ஆஸ்பத்திரியில் நோயுற்று படுத்து கிடப்பதை இந்த 4 நாய்களால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

காத்து கிடந்தன

காத்து கிடந்தன

அதனால் ஆஸ்பத்திரி வாசற்படிக்கு வந்து 4 நாய்களும் நின்றுவிட்டன. சீசரை பார்ப்பதற்காக அவை காத்து கிடப்பதை மருத்துவமனை நிர்வாகம் ஆச்சரியத்துடன் பார்த்தது. இப்படியே ஒரு மணி நேரமாக நாய்களும் நின்று கொண்டே இருந்தன.

போட்டோ

இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், சீசரை பார்க்க உள்ளே அனுமதித்து இருக்கிறார்கள். சீசரால் வளர்க்கப்படாத நாய்கள் இப்படி ஏக்கத்துடன் காத்து நிற்பதை ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர், போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

கண்கலங்குகிறது

கண்கலங்குகிறது

எந்தவித எதிர்பார்ப்பற்ற பாசமும்,புரிதலும், உள்ள தெருநாய்களின் ஏக்கமிகு முகத்தினை கண்டு எல்லோருமே கண்கலங்கி விடுகின்றனர். இந்த போட்டாதான் தற்போது வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+