Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வலுக்கட்டாயமாக உறவு வைத்த கணவர்.. கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை

சூடானில் வலுக்கட்டாயமாக உறவு வைத்த கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை-வீடியோ

    ஓம்துர்மன்: சூடானில் வலுக்கட்டாயமாக உறவு வைத்த கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான நிலையில் நவுராவுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது.

    ஆனால் நவுராவுக்கோ திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. படித்து ஆசிரியையாக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது.

    நைசாக பேசி அழைத்து..

    நைசாக பேசி அழைத்து..

    இதனால் கணவருடன் வாழ மறுத்த அவர் தனது அத்தை வீட்டில் மூன்று ஆண்டுகளை கழித்தார். பின்னர் அவரிடம் நைசாக பேசி அழைத்து சென்ற குடும்பத்தினர் நவுராவை அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

    அனுமதியின்றி உறவு

    அனுமதியின்றி உறவு

    ஒப்படைக்கப்பட்ட சில நாட்களிலேயே குடும்பத்தினர் உதவியுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்தார் அவரது கணவர். மறுநாளும் தனது மனைவியை அவரின் அனுமதியின்றி பலாத்காரம் செய்ய முயன்றார் கணவர்.

    கணவரை கொன்ற மனைவி

    கணவரை கொன்ற மனைவி

    இதனால் ஆத்திரமடைந்த நவுரா கணவர் என்றும் பாராமல் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். பின்னர் கணவரை கொலை செய்ததை கூறி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

    இழப்பீடு கேட்டால்

    இழப்பீடு கேட்டால்

    இதுதொடர்பாக நவுரா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இஸ்லாமிய சட்டதிட்டப்படி, கொலையாளியிடம் இருந்து, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு பெற சம்மதித்தால் கொலையாளிக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்கும்.

    மரண தண்டனைக்கு வலியுறுத்தல்

    மரண தண்டனைக்கு வலியுறுத்தல்

    ஒருவேளை இழப்பீட்டை அவர்கள் ஏற்காவிட்டால், கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில் நவுரா வழக்கில் கணவரின் குடும்பத்தினர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    மனைவிக்கு மரண தண்டனை

    மனைவிக்கு மரண தண்டனை

    ஒருவேளை இழப்பீட்டை அவர்கள் ஏற்காவிட்டால், கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில் நவுரா வழக்கில் கணவரின் குடும்பத்தினர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+