எண்ணெய் வளமிக்க பைஜி நகரம் மீதும் சதாம் ஆதரவுப் படைகள் உக்கிர தாக்குதல்!!
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: வடக்கு ஈராக்கில் மிகப் பெரிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் அமைந்துள்ள பைஜி நகரம் மீது சதாம் ஆதரவுப் படைகள் உக்கிரத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

ஈராக்கின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வருகிறது சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். இன்று அதிகாலை 4 மணியளவில் பைஜியின் எண்ணெய் சுத்தகரிப்பு நுழைவாயில்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது சதாம் ஆதரவு படை.
தற்போது அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முற்று முழுதாகவே சதாம் ஆதரவுப் படை வசம் வந்துள்ளது. இந்த தகவலை சர்வதேச ஊடகங்களும் உறுதி செய்துள்ளன.












Click it and Unblock the Notifications