அனைவருக்கும் வருடத்திற்கு ரூ. 18.67 லட்சம் அடிப்படை சம்பளம் தரலாமா?.... சுவிஸில் வாக்கெடுப்பு
பெர்ன் வயது வந்த குடிமக்களுக்கு வருடத்திற்கு ரூ. 18,67,590 அடிப்படை ஊதியம் வழங்கலாமா என்பது குறித்து தேசிய அளவிலான வாக்கெடுப்பை சுவிட்சர்லாந்து நடத்துகிறது.
சுவிட்சர்லாந்தில் அனைவருக்கும் சமமான ஊதியம் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து இதுதொடர்பாக தேசிய அளவிலான வாக்கெடுப்பை சுவிட்சர்லாந்து நாடு நடத்துகிறது.
அதில், வயது வந்த அனைவருக்கும் வருடத்திற்கு சமமான அளவில் ரூ. 18,67,590 அடிப்படை ஊதியமாக தரலாமா என்பது குறித்து கேள்வி கேட்கப்படும். இந்த வாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து நாட்டு வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாக்களிக்கவு்ளனர். இதன் அடிப்படையில், இதை சட்டமாக்குவது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசு முடிவெடுக்கும்.
பிற நாடுகளைப் போலவே சுவிட்சர்லாந்திலும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்தே அனைவருக்கும் ஒரே மாதியான ஊதியத்தை நிர்ணயம் செய்ய கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு மிக மிக அதிகமான அளவில் சம்பளமும், மற்றவர்களுக்கு குறைவாகவும் இருப்பதை தடுத்து அனைவருக்கும் சம ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் பொருளாதார ஏற்றத் தாழ்வு வெகுவாக குறையும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்தே தற்போது இந்த வாக்கெடுப்பை நடத்துகிறது சுவிட்சர்லாந்து அரசு. இந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவை அரசிடம் அளித்துள்ளனர்.
அத்தோடு நில்லாமல் ஒரு லாரி நிறைய 80 லட்சம், ஐந்து பைசா (அந்த ஊரில் ஐந்து சென்ட்) நாணயங்களைக் கொண்டு வந்து பெர்ன் நகரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடம் முன்பும் கொட்டி தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
சுவிட்சர்லாந்து நாட்டுச் சட்டப்படி, மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வாக்கெடுப்பு நடத்த அரசை நிர்ப்பந்திக்க முடியும். இதனால் வருடத்திற்கு பல வாக்கெடுப்புகள் அங்கு நடப்பது சகஜம். வாக்கெடுப்பில் கிடைக்கும் முடிவை அரசு அமல்படுத்தியாக வேண்டும்.












Click it and Unblock the Notifications