க்ரீன் சிக்னல்.. கோவேக்சின் தடுப்பூசிக்கு ஓகே சொன்ன பிரபல நாடு..தொற்றை தடுக்கும் தீவிரத்தில் அரசுகள்
கோவேக்சினுக்கு ஸ்விட்சர்லாந்து அனுமதி தந்துள்ளது
பெர்ன்: கோவேக்சின் தடுப்பூசிக்கு ஸ்விட்சர்லாந்து அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளதாம்.. அதேபோல மேலும் சில நாடுகளும் கோவேக்சினை பயன்படுத்த முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது.. இந்த தடுப்பூசியை பெரும்பாலானோருக்கு இந்தியா செலுத்தி வருகிறது..
ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்காமல் இருந்து வந்தது.. எனவே, அதனை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்வதற்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வழங்கியது...

வைரஸ்
இது சம்பந்தமாக, முன்னதாக, நடத்தப்பட்ட அந்த கிளினிகல் சோதனை முடிவுகளில் கோவேக்சின் தடுப்பூசியானது, அறிகுறிகளுடன் கூடிய கொதரானாவுக்கு எதிராக 77.8 சதவீதம் பாதுகாப்பையும், புதிய டெல்டா மரபணு மாற்று வைரசுக்கு எதிராக 65.2 சதவிகித பாதுகாப்பையும் அளிக்கக்கூடியதாக இருப்பதாக உறுதியானது. இந்த நிறுவனமானது, அமெரிக்காவை சேர்ந்த ஒகுஜென் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அமெரிக்கா
எனவே, 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்தி கொள்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஒகு ஜென் நிறுவனம் வாயிலாக அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலும் கூறப்பட்டிருந்தது. அதேசமயம், பல்வேறு நாடுகள் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதியை வழங்கி வருகின்றன.. 2 நாளைக்கு முன்பு மலேசியாவில்கூட கோவேக்சின் செலுத்தி கொள்ள அனுமதி தரப்பட்டது.

பிரிட்டன்
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு சுவிட்சர்லாந்து நாட்டு அரசும் அங்கீகாரம் அளித்துள்ளது... இதே போல், ஐரோப்பிய நாடான பிரிட்டனும், கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அங்கீகாரம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது... அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகள், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே அங்கீகாரம் அளித்திருக்கும் நிலையில், மேலும் சில நாடுகள் இதில் இணைந்து வருகின்றன.

உயிரிழப்பு
உலகம் முழுவதும் இதுவரை 251,027,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5,070,865 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்... கொரோனாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 227,299,787 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில் 18,656,738 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18,580,373 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 76,365 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications