தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும்:இலங்கை அமைச்சர்
கொழும்பு: தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்நாட்டு மீன்வளம் மற்றும் நீரியல் பாதுகாப்பு துறை அமைச்சர் மஹிந்த அமரவிரா தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை, அமைச்சர் மஹிந்த அமரவிரா இலங்கையில் நேற்று பார்வையிட்டார். கடற்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள், வழக்குகள் முடிந்த பிறகு அரசுடமையாக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவிரா தெரிவித்தார். மேலும், அரசுடைமையாக்கப்பட்ட பிறகு இலங்கை மீனவர்களிடம் அனைத்து படகுகளும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் படகுகள் இலங்கை மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அமைச்சர் கூறியதற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய தூதரகம் மூலம் இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications