இதுதான் கொரோனாவின் கோர முகம்.. இந்தியாவில் அதுதான் நடக்கிறது.. ஹூ தலைவர் வேதனை

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா: கொரோனாவைரஸ் எப்படியெல்லாம் தனது கோர முகத்தைக் காட்டும் என்பதை இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அடனாம் கெப்ரியேசிஸ் கூறியுள்ளார்.

Recommended Video

    அதிர வைக்கும் கொரோனாவின் புதிய உச்சம்: இந்தியாவில் 3.50 லட்சத்தை நெருங்கிய ஒரு நாள் பாதிப்பு!

    முதல் அலையிலிருந்து தப்பிய இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிக மோசமாக உள்ளது. வட இந்தியாவில் மக்கள் கொத்துக் கொத்தாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர். மருத்துவமனைகளில் இடமில்லை, ஆக்சிஜன் இல்லை, எந்த வசதியும் இல்லாத பரிதாப நிலையில் தத்தளிக்கும் மக்கள் பார்க்கவே மிக பரிதாபமாக இருக்கிறது.

    Tedros Adhanom Ghebreyesus says India sees the Devastating face of Coronavirus

    இந்தியாவின் இதர மாநிலங்களிலும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் சம்பவங்களை உலக நாடுகள் கவலையுடனும், அச்சத்துடனும் கவனிக்க ஆரம்பித்துள்ளன.

    இந்த நிலையில், ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் வீடியோ காலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், உலகம் முழுவதும் சரியான பரிசோதனை இல்லாமலும், சிகிச்சை இல்லாமலும், தடுப்பூசி போடப்படாத காரணத்தாலும் பெருமளவில் மக்கள் மடிந்து வருகின்றனர்.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலைமையைப் பார்க்கும்போது கொரோனாவைரஸின் கோர முகம் எப்படி இருக்கும், எந்த அளவுக்கு அது சீரழிவை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளலாம் என்றார் டெட்ராஸ்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+