கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: 39 பேர் பலி!
துருக்கியில் இரவு விடுதியொன்றில் கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் புத்தாண்டு கொண்டாடியவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 39 பேர் உயிரிழந்தனர்.
இஸ்தான்புல்: துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் புத்தாண்டை கொண்டாடிய மக்கள் மீது கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து வந்த தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 39 பேர் பலியாயினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் புத்தாண்டையொட்டி மக்கள் நேற்றிரவு கேளிக்கை நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்த 2 பேர் கேளிக்கை விடுதிக்குள் புகுந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு ஆடிபாடிக்கொண்டிருந்தவர்கள் மீது அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 39 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அரபு மொழியில் பேசியதாக கூறப்படுகிறது.
விடுதியில் 700க்கும் மேற்பட்டோர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள்வெளியாகியுள்ளன. துருக்கியில் குர்திஷ் தீவிரவாதிகளும், இஸ்லாமிய ஜிகாதிகளும் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் இஸ்தான்புல்லில் கால்பந்தாட்டப்போட்டியின் போது நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுதாக்குதலில் 1,044 பேர் கொல்லப்பட்டனர். ஜூன் மாதம் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் 47 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.