For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன அழுத்தம்... முதலைகள் குளத்தில் குதித்து உயிர் நீத்த 65 வயது பாட்டி!

Google Oneindia Tamil News

பாங்காங்: தாய்லாந்தில் 65 வயதான மூதாட்டி ஒருவர் பாங்காங்கில் உள்ள சுற்றுலாத்தில் அமைந்துள்ள முதலைகள் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சுற்றுலாத்தலம் திறந்திருக்கும் வேலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

விலங்குகள் காட்சியக்கத்துடன் கூடிய அச்சுற்றுலாத்தலத்தில் நடைபாதையிலிருந்து முதலை போன்ற பிராணிகளுக்கு உணவளிக்க முடியும்.

மூதாட்டி தற்கொலை:

அந்த நடைபாதையில் இருந்து குதித்து அப்பெண்மணி கடந்த வெள்ளியன்று தற்கொலை செய்து கொண்டார்.

100க்கும் மேலான முதலைகள்:

அக்குளத்தில் கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் மன அழுத்தம்:

"அவர் கடந்த சில நாட்களாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்" என்று அவருடைய சகோதரி பிரெச்சா தெரிவித்துள்ளார். அந்த பிரதேசமானது பாங்காங்கிலிருந்து ஒரு மணி நேரத் தொலைவில் உள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகள்:

அங்கு சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக தளர்த்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளே அங்கு கடைபிடிக்கப்படுகின்றது.

ஆபத்தான விலங்குகள்:

அந்த ஜூவில் புலி, முதலை போன்ற ஆபத்தான விலங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 65-year- old Thai woman has committed suicide by leaping into a pond of crocodiles at a farm popular with tourists on Bangkok's outskirts, police told AFP on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X