மகிழ்ச்சி.. இந்தியாவில் இனி எப்போதும் நெட் நியூட்ராலிட்டி.. தொலைத் தொடர்பு ஆணையம் அதிரடி!
நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணைய சமநிலைக்கு ஆதரவாக இந்திய தொலைத் தொடர்பு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணைய சமநிலைக்கு ஆதரவாக இந்திய தொலைத் தொடர்பு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இணைய சமநிலைக்கு எதிராக எந்த மாற்றமும், சட்டமும் கொண்டு வரப்போவதில்லை என்று கூறியுள்ளது.ஏற்கனவே பலமுறை உலகம் முழுக்க இந்த இணைய சமநிலைக்கு பிரச்சனை உருவாகி இருக்கிறது. கடந்த 2016ல் கூட இந்தியா முழுக்க இதுகுறித்த விவாதம் எழுந்தது.
அதன்பின் பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் இணைய சமநிலைக்கு எதிராக செயல்பட முடிவெடுத்து காய் நகர்த்தி பார்த்தது. மொத்த உலகத்தின் வளர்ச்சியையும், சமத்துவத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் இணைய சமநிலைக்கு எதிராக சில அறிவிப்புகள் வெளியாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியா இணைய சமநிலைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன
நாம் பயன்படுத்தும் இணையதளங்கள் அனைத்திற்கும் ஒன்றாகவே பணம் கட்டுகிறோம். 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து நெட் பயன்படுத்தினால், நாம் அனைத்து இணையதளங்களையும் பார்க்க முடியும். ஒரே வேகத்தில் பயன்படுத்த முடியும். இதுதான் இணைய சமநிலை. இதற்கு எதிராக சட்ட திருத்தம் கொண்ட வரப்பட இருப்பதாக 2 வருடங்களுக்கு முன் பிரச்சனை எழுந்தது.

பிரச்சனை என்ன
ஒருவேளை இணைய சமநிலை மட்டும் இல்லையென்றால், பல பிரச்சனைகள் ஏற்படும். எப்போதும் போல 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், நம்மால் எல்லா இணையதளங்களையும் பார்க்க முடியாது. சில இணையதளங்களை மட்டுமே இயக்க முடியும். பல இணையதளங்களின் வேகம் பெரிய அளவில் குறையும். ஒவ்வொரு இணையதள செயலுக்கும் தனியாக பணம் கட்ட வேண்டி இருக்கும்.

எப்போதும் சமநிலை
இந்த நிலையில் இந்தியாவில் எப்போதும் போல இணைய சமநிலை தொடரும் என்று தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. எந்த ஒரு பெரிய நிறுவனத்தின் பேச்சையும் இதில் கேட்க போவதில்லை என்று தொலைத் தொடர்பு ஆணையம் கூறியுள்ளது. இந்தியாவில் இணைய சமநிலைக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பேஸ்புக் பெரிய அளவில் முயற்சி எடுத்து தோல்வி அடைத்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற நாடுகளில் எப்படி
அமெரிக்காவில் தற்போது இதற்கு எதிராக இணைய சமநிலை சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. சீனாவில் அவர்களுக்கு என்று இணைய விதிகளுக்கு சட்டம் இருக்கிறது. கனடாவில் இந்தியாவை விட அதிக அளவு இணைய சுதந்திரம் நிலவி வருகிறது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் இணைய சமநிலை முறையாக பேணப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications