“குடுத்த வாக்கை காப்பாத்த முடியல போலீஸ்கார்..” பேஸ்புக்கில் மன்னிப்பு கேட்ட குசும்புக்கார திருடன்!
அமெரிக்காவில் திருடன் ஒருவன் பேஸ்புக்கில் பதிவு போட்டு சரணடைந்துள்ளான்.
சென்னை: அமெரிக்காவில் திருடன் ஒருவன் தன்னுடையே தேடப்படும் போஸ்டரில் கமெண்ட் போட்டு சரணடைந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ரிச்லேன்ட் காவல்துறையினர் சமீபத்தில் தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் அந்தோனி ஆக்கர் எனும் திருடனின் போட்டோவை பதிவிட்டு, அதில் தேடப்படும் குற்றிவாளி என குறிப்பிட்டிருந்தனர். இதன்மூலம் அந்த நபர் குறித்து யாராவது தகவல் தெரிவிப்பர் என போலீசார் எதிர்பார்த்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக சம்மந்தப்பட்ட திருடனே அந்த பதிவில் தன்னை பற்றிய தகவல் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினான். அதாவது தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், தானாகவே வந்து சரணடைவதாகவும் அவன் தெரிவித்திருந்தான்.
ஆனால் உறுதியளித்தப்படி அந்தோனி போலீசாரிடம் சரணடையவில்லை. இதையடுத்து, போலீசார் ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டனர். அதில், "ஏய் அந்தோனி, உறுதியளித்தபடி நீ வரவில்லை. எங்களுடைய வேலை நேரம் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை. உன்னால் வர முடியவில்லை என்றால் எங்களுக்கு தகவல் சொல், நாங்களே வந்து அழைத்துக்கொள்கிறோம்", என கூறியிருந்தனர்.
இதற்கு பதில் அளித்த அந்தோனி, "மிக்க நன்றி. கடந்த ஒரு மாதமாக மிகவும் பிஸியாக இருக்கிறேன். இன்னும் 48 மணி நேரத்தில் வந்து விடுகிறேன்", என தெரிவித்தான்.
ஆனால் இப்போதும் அந்தோனியால் சொன்னபடி சரணடைய முடியவில்லை. இதுகுறித்து வருத்தம் தெரிவித்து அவன் வெளியிட்ட பதிவில், " அன்புக்குரிய காவல்துறைக்கு, இது என்னுடைய தவறு தான். எனக்கு நிறைய கமிட்மெண்ட்டுகள் இருப்பதால், சொன்னபடி என்னால் சரணடையமுடியவில்லை. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாளை மதியம் உணவு நேரத்திற்குள் நான் அங்கு இருப்பேன். இதை நீங்கள் நம்பமாட்டீர்கள் என தெரியும். அதுவும் சரி தான். ஏனென்றால் முன்பு நான் கூறிய வார்த்தையை காப்பாற்றவில்லை. நாளை நான் நிச்சயம் வந்துவிடுவேன்", என குறிப்பிட்டிருந்தான்.
இதையடுத்து, சொன்னபடி மறுநாள் மதியம் அந்தோனி காவல் நிலையத்தில் சரணடைந்தான். அதை போட்டோ எடுத்து பேஸ்புக்கிலும் பதிவிட்டான். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications