சொல்லாம கொள்ளாம "செய்ய"க் கூடாது... இங்கிலாந்துக்காரருக்கு கோர்ட் போட்ட அதிரடி தடை!
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு, பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் "24 மணி நேரத்துக்கு" முன்பு கோர்ட்டுக்குத் தகவல் தெரிவித்து "பெர்மிஷன்" வாங்க வேண்டும் என்று கோர்ட் ஒன்று போட்டுள்ள அதிரடி உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அடுத்த விசாரணை நான்கு மாதம் கழித்து வருகிறது. அதுவரை இந்த உத்தரவு தொடரும் என்றும் கோர்ட் குண்டைப் போட்டுள்ளது அந்த நபரின் செக்ஸ் ஆசையில்.
இங்கிலாந்தில், பொதுமக்களுக்கு ஒரு நபரால் அபாயம் அதிகம் இருக்கிறது என்று காவல்துறை நினைத்தால் அப்படிப்பட்ட நபர்களுக்கு எதிராக இதுபோன்ற உத்தரவை காவல்துறை கோர்ட்டில் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பிரிவின் கீழ்தான் தற்போது இந்த நபருக்கு இப்படிப்பட்ட தடையைப் பிறப்பித்துள்ளது கோர்ட்.
வடக்கு யார்க்ஷயரில்
வடக்கு யார்க்ஷயர் காவல்துறையின் கோரிக்கையின் பேரில் இந்த உத்தரவை யார்க் மாஜிஸ்திரேட் கோர்ட் பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பும் இதேபோன்ற தடை அந்த நபருக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அது காலாவதி ஆனதைத் தொடர்ந்து தற்போது புது உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
பெயர் அட்ரஸ் ப்ளீஸ்!
இந்த நபருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவின்படி, இவர் யாருடனாவது செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினால் முதலில் அந்தப் பெண்ணின் பெயர், வயது, முகவரி, எங்கே வசிக்கிறார் என்பது போன்ற தகவல்களை கோர்ட்டுக்குத் தெரிவிக்க வேண்டும்.
24 மணி நேரத்துக்கு முன்னாடியே
மேலும் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினால் அதுகுறித்து 24 மணி நேரத்திற்கு முன்பே இந்த விவரத்தைச் சொல்லி பெர்மிஷன் வாங்க வேண்டும்.
சொல்லாட்டி ஜெயில்
சொல்லாமல் கொள்ளாமல் செக்ஸ் வைத்துக் கொண்டது தெரிய வந்தால் உடனடியாக அவரை சிறையில் அடைக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் பார்க்கக் கூடாது
மேலும் இந்த நபருக்கு இன்டர்நெட்டைப் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இவர் எதையும் பாக்காத வகையில் இவரது கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்டவற்றை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனராம்.
அரசு அலுவலகத்தில் போய்ப் பார்க்கலாம்
அதேசமயம், அரசு அலுவலகங்களுக்குச் செல்லும்போது அங்கு வைத்து இன்டர்நெட்டைப் பார்க்கத் தடை இல்லையாம்.
அந்த "மகான்" யாருப்பா!
இப்படிப்பட்ட தடைக்குள்ளாகி, பெரும் இக்கட்டில் சிக்கியுள்ள அந்த "மகானின்" பெயரை போலீஸார் வெளியிட மறுத்துள்ளனர். சட்டப்படி அப்படிச் சொல்லக் கூடாதாம்.
சர்தான் எஜமான்!