தயார் நிலையில் இருங்கள்.. முப்படைகளுக்கு அறிவித்த பென்டகன்.. தீவிர ஆலோசனையில் டிரம்ப்.. போரா?
ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டின் முப்படை தளபதிகள் உடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video
டெஹ்ரான்: ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டின் முப்படை தளபதிகள் உடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மாலைக்குள் இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறுகிறார்கள்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த நிலையில்தான் ஈரான் அமெரிக்க இடையே சண்டை தொடங்கியது.
பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க படைகளை ஈரான் தாக்க தொடங்கி உள்ளது. அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

எப்படி தாக்குதல்
இந்த தாக்குதல் தொடர்பாக தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். வெள்ளை மாளிகையில் இருக்கும் வார் ரூமில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. முப்படை தளபதிகள் அங்கு உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை
அமெரிக்காவின் எல்லையை சுற்றி இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் விமான படை தளங்கள், ராணுவ தளங்கள் மீதுதான் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கூறியது. தற்போது அதேபோல் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

உலகம் முழுக்க
இதனால் உலகம் முழுக்க அமெரிக்காவிற்கு இருக்கும் 100க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று மாலைக்குள் இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாகத்தான் டிரம்ப் முப்படை தளபதிகள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பதில்
இந்த தாக்குதலை அடுத்து அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகனும் போர் நடத்த தயார் ஆகியுள்ளது. இதற்கான ஈராக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்க படைகளை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications