டொனால்ட் ட்ரம்ப் நடத்திய தாஜ் மஹால் சூதாட்ட விடுதியில் தொழிலாளர்கள் ஸ்டிரைக்!
அட்லாண்ட்டிக் சிட்டி: அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னர் நடத்திய தாஜ் மஹால் சூதாட்ட கேளிக்கை விடுதியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
அட்லாண்ட்டிக் சிட்டியில் தாஜ் மஹால் சூதாட்ட கேளிக்கை விடுதியை தொடங்கி நடத்தியவர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால் தாம் திவாலாகிவிட்டதாக கூறி இந்த விடுதியை ட்ரம்ப் எண்டர்டெயின்மெண்ட் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் திருப்பி ஒப்படைத்துவிட்டார் டொனால்ட் ட்ரம்ப்.

கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் டொனால்ட் டரம்ப்க்கும் தாஜ் மஹால் சூதாட்ட விடுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனிடையே தங்களது ஓய்வூதியம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தாஜ் மஹால் சூதாட்ட கேளிக்கை விடுதி தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் தமக்கு நெருக்கடி கொடுத்தால் விடுதியையே இழுத்து மூடிவிடுவேன் என தாம் மஹால் சூதாட்ட விடுதியின் தற்போதைய உரிமையாளர் ஐசான் மிரட்டி வருகிறார். இதில் ஐசானுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன. இதனால் தாஜ் மஹால் சூதாட்ட விடுதியின் தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2004-ம் ஆண்டு இதேபோன்ற வேலை நிறுத்தப் போராட்டம் 34 நாட்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications