மோடிக்கு கீதையை பரிசாக வழங்கிய அமெரிக்க எம்.பி. துளசி காப்பர்ட்
நியூயார்க்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு முதலாவது இந்து எம்.பி.யான துளசி காப்பர்ட் கீதையை பரிசாக வழங்கினார்.
அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் முதலாவது "இந்து" எம்.பி.யான துளசி காப்பர்ட் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது பகவத் கீதை புத்தகத்தை துளசி காப்பர்ட், பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார்.

இந்தியாவின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக இதனை செய்வதாக துளசி காப்பர்ட் தெரிவித்துள்ளார். துளசி காப்பர்ட் அமெரிக்க எம்.பியாக பதவியேற்ற போது, பகவத் கீதை மீது உறுதிமொழி எடுத்தார்.
இது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில், "நான் கீதை குழந்தையில் இருந்து வைத்திருந்தேன். மத்திய கிழக்கில் போர் பணியில் ஈடுபட்டபோதும் பாதுகாப்பிற்காக கீதையை வைத்திருந்தேன். கீதையின் மீது உறுதிமொழி எடுத்தேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications