துருக்கி எல்லையில் குவியும் சிரிய அகதிகள் வன்முறையால் எல்லை மூடப்பட்டது!

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். இந்த தீவிரவாதிகள் சிரியாவின் வடக்கு பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி, முன்னேறி வருகின்றனர்.
அவர்கள் துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களை கைப்பற்றி உள்ளனர். எக்சிம் இன் இட்லிப், சரகுப் நகரங்களை தீவிரவாதிகள் சுற்றி வளைத்தனர். இந்த பகுதியில் சிரியா அரசுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 குழந்ததைகள், 11 பெண்கள் உள்பட 40 பேர் பலியானதாக இங்கிலாந்து மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
துருக்கி எல்லைப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கை ஓங்கி வருகிறது. இதனால் கடந்த 3 நாட்களில் உயிருக்கு பயந்து, அங்கு வசித்து வந்த 1,லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு, குடும்பம், குடும்பமாக துருக்கியில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
நேற்று சில குர்து மக்கள் கும்பலாக துருக்கி எல்லைக்குள் நுழைய முயன்றனர் அவர்களை துருக்கிய படைகள் தடுத்து நிறுத்தின இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் கொபானி நகரில் இருந்து வந்த அகதிகள் ஆவார்கள்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி உருவானதில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான சிரியாவை சேர்ந்தவர்கள் அகதிகளாக துருக்கிக்கு வந்து உள்ளனர்.
தொடர்ந்து அதிகமான அகதிகள் வருவதால் துருக்கியில் அகதிகள் தங்கவைக்கபட்டு உள்ள பள்ளிகூடங்களில் நெரிசல் ஏற்பட்டு உள்ளது .இதை சமாளிக்க துருக்கி பாதுகாப்பு வீரர்கள் அகதிகள் வருகையை கட்டுப்படுத்த முயன்றனர் அதனால் அங்கு போராட்டம் வெடித்தது. போராட்டகாரர்கள் துருக்கி ராணுவ வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். போராட்டகாரர்கள் மீது கன்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.போராட்டத்தை தொடரந்து துருக்கி எல்லை மூடபட்டு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications