சிரியா எல்லையில் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி விமானங்கள்! விமானி சாவால் பதற்றம்
இஸ்தான்புல்: துருக்கி-சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய நாட்டு ராணுவ போர் விமானத்தை துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன. விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதை ஒரு தொலைக்காட்சி சேனல் எடுத்து ஒளிபரப்பியது. விமானம் தீப்பிடித்து எரிந்தபடி கீழே விழுவது அந்த காட்சிகளில் உள்ளது.
துருக்கி வான் எல்லைக்குள் அந்த விமானம் அத்துமீறி நுழைந்ததாகவும், எனவே துருக்கி போர் விமானங்கள் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த தொலைக்காட்சி சேனல் கூறியிருந்தது. இதை துருக்கியும் உறுதி செய்துள்ளது.

10 முறை அந்த விமானத்தை எச்சரித்த பின்னரே தங்களது போர் விமானங்கள் அதை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியுள்ளது. இந்த தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தின் 2 பைலட்கள் பாராசூட் மூலம் குதித்து தப்பியதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதில் ஒரு விமானியை சிரிய நாட்டில் அதிபருக்கு எதிராக போராடி வரும் சிரிய சுதந்திரப் படை போராளிகள் கைது செய்துள்ளதாகவும், இன்னொருவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பைலட்டை, சுற்றிலும், போராளிகள் நின்று கோஷமிடும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த இரு பைலட்களும் உயிரோடு இருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#SONDAKİKA!Türkmen Dağı'nın yakınına savaş uçağı düştü...Uçağın düşme anını Habertürk TV ekibi görüntüledihttps://t.co/PCUK9Z6RTA
— Habertürk TV (@HaberturkTV) November 24, 2015 சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் எந்த நாட்டுடையது என்பது முதலில் தெரியாமல் இருந்தது. சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல நாட்டு படைகளும் போர் புரிந்துவருகின்றன. எனவே இது எந்த நாட்டு போர் விமானமாக இருக்கலாம் என்ற குழப்பம் நீடித்தது.
ஆனால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அது தங்கள் நாட்டு விமானம் என்று அறிவித்த பிறகு குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், "துருக்கி ராணுவத்தால் வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் சுகோய்-24 வகை போர் விமானம். ரஷ்யா அத்துமீறி துருக்கி எல்லைக்குள் நுழையவில்லை. விமானம் சுடப்பட்டபோது, ரஷ்ய விமானம், 6,000 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது" என்று கூறப்பட்டது.
தமது விமானம் இன்னொரு விமானத்திலிருந்து சுடப்படவில்லை, தரையிலிருந்துதான் சுடப்பட்டுள்ளது எனவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை கூறுகிறது.
மேலும், போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது சீரியசான விஷயம் என்று ரஷ்ய அதிபர் புடின் கோபம் வெளிப்படுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications