குளித்துக் கொண்டே பைக் ஓட்டிய இளைஞர்கள்.. உங்க அலம்பலுக்கெல்லாம் அளவே இல்லாம போய்டுச்சு!
வியட்நாமில் பைக் ஓட்டியபடி குளித்த இரண்டு பேருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
Recommended Video
ஹானோய்: வியட்நாமில் பைக் ஓட்டியபடி இருவர் குளிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
எத்தனையோ வைரல் வீடியோக்களில், பலவிதமான விசித்திர சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். அதுபோல் தற்போது வியட்நாம் நாட்டில் நடந்த வேடிக்கை சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
வியட்நாமின் டுவாங் மாகாணத்தை சேர்ந்த ஹூய்ன்தன் கான் என்ற வாலிபர் தனது நண்பருடன், மோட்டார் சைக்கிளில் மேலாடை அணியாமல் பயணித்தனர். அவர்கள் இருவரும் பைக்கில் சென்றபடியே ஒரு வாளியில் இருந்து தண்ணீரை எடுத்து மேலே ஊற்றி, சோப் போட்டு குளித்தனர்.
இந்த விநோத செயலை பார்த்த மக்கள், அதிர்ந்து போயினர். சிலர் அவர்களை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ உடனே வைரல் ஆனது. அந்த வாலிபர்களின் செயலை நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும் அந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கும் சென்றதைத் தொடர்ந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எலும்புக்கூடுக்கு டிரஸ் போட்டு.. அபராதத்தில் இருந்து தப்பிக்க தாத்தா செய்த தில்லாலங்கடி.!