வட கொரியாவில் பெரும் மனித உரிமை மீறல்கள்: ஐ.நா சபை அறிக்கை
ஜெனிவா: வடகொரியாவில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வடகொரியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபை விசாரணைக் குழுவை நியமித்திருந்தது. இக்குழுவுக்கு ஆஸ்திரேலியாவின் ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் கிர்பி தலைமை வகித்தார்.
இக் குழு ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமது விசாரணை அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், வடகொரியாவில் சொல்ல முடியாத அளவில் சித்திரவதை, பாலியல் பலாத்காரம், மிகப் பெரிய அளவிலான அரசியல் பழிவாங்கல் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள், அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எப்படியெல்லாம் வடகொரியா அரசு மனித உரிமை மீறல்களை மீறியுள்ளது என்பதையும் அந்த விசாரணை அறிக்கை விவரித்துள்ளது.