30 ஆண்டு பழக்கத்தை மாற்றிய US.. இஸ்ரேலில் திடீர் மாற்றம்! விடாமல் தொற்றிக்கொண்டிருக்கும் ஈரான் பயம்!
டெல் அவிவ்: கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா தனது போர் விமானங்களை இஸ்ரேலில் நிரந்தரமாக நிலை நிறுத்தியது கிடையாது. ஏனெனில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து அரபு நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்கிற அச்சம் இருந்தது. இந்நிலையில், இந்த பழக்கத்தை அமெரிக்கா தற்போது மாற்றியிருக்கிறது.
அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த F-22 ராப்டர் போர் விமானங்களை முதன்முறையாக இஸ்ரேலில் நிறுத்தியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, தனது ராணுவக் கொள்கையில் பெரிய மாற்றத்தை செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

ஈரான் பயம்
ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும், வளைகுடா நாடுகளில் ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகத்தான் இஸ்ரேலில் கொண்டு போய் தனது விமானத்தை அமெரிக்கா நிறுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த F-22 விமானங்கள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறனை மேலும் பலப்படுத்தும். ஆனால், இந்த நடவடிக்கையால் அரபு நாடுகள் ஜர்க் ஆகியுள்ளன. காரணம் இந்த விஷயம் குறித்து அமெரிக்கா வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.
F-22 ஜெட் விமானங்கள் இஸ்ரேலில் வந்திறங்கும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகின. அமெரிக்க விமானப்படையின் F-22, வானில் ஆதிக்கம் செலுத்தி, துல்லியமாகத் தாக்கி, குண்டுவீச்சு விமானங்களுக்குப் பாதுகாப்புப் பணியை செய்யக்கூடிய மிகத் திறமையான ஒரு போர் விமானம் இது.
ஈரான் மீது தாக்குல்
டிரம்ப், ஈரானின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்கள் மீது அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவேளை டிரம்ப் சொல்வதை ஈரான் கேட்கவில்லை எனில், ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க டிரம்ப் பிளான் போட்டு வருகிறார். இதற்கு முன்னரும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஆனால், கடந்த முறை போல, இந்த முறை தாக்குதல் ஏதேனும் நடத்தப்பட்டால் பழிவாங்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது. குறிப்பாக அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தது.
அரபு நாடுகள் அச்சம்
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தங்கள் நிலப்பரப்பையோ அல்லது வான்வெளியையோ அமெரிக்க படைகள் பயன்படுத்த கூடாது என்று கறாராக சொல்லிவிட்டது. இதனால், ஜோர்டானில் உள்ள முவாஃபாக் சால்டி போன்ற ராணுவத் தளங்களில் அமெரிக்கப் போர் விமானங்கள் குவிக்கப்படுவது பிரச்சனைகளை உருவாக்கும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது. இப்படி இருக்கையில் இஸ்ரேலில் தனது விமானங்களை நிலை நிறுத்தியன் மூலம், அமெரிக்காவுக்கு மாற்று வழி இருக்கிறது என்பதை டிரம்ப் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரச்சனை
வரலாற்று ரீதியாக, அமெரிக்க தளபதிகள் அரபு நாடுகளுடன் தொடர்ந்து நட்பில் இருக்க வேண்டும் என்பதற்காக, தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க இஸ்ரேலுடன் ராணுவ ஒத்துழைப்பில் இருந்து விலகி இருந்தனர். ஏனெனில் இஸ்ரேலுக்கும்-அரபு நாடுகளுக்கும் சுத்தமாக செட் ஆகாது. ஆனால், 2021-க்கு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. இப்போது அமெரிக்க விமானங்கள் நேரடியாக இஸ்ரேலுக்கு வந்து இறங்கும் அளவுக்கு இந்த மாற்றம் நடந்திருக்கிறது.
-
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்.. வளைகுடா நாடுகளை விட்டு வர மறுக்கும் இந்தியர்கள்! உருக்கமான பின்னணி -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல்












Click it and Unblock the Notifications