Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

30 ஆண்டு பழக்கத்தை மாற்றிய US.. இஸ்ரேலில் திடீர் மாற்றம்! விடாமல் தொற்றிக்கொண்டிருக்கும் ஈரான் பயம்!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா தனது போர் விமானங்களை இஸ்ரேலில் நிரந்தரமாக நிலை நிறுத்தியது கிடையாது. ஏனெனில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து அரபு நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்கிற அச்சம் இருந்தது. இந்நிலையில், இந்த பழக்கத்தை அமெரிக்கா தற்போது மாற்றியிருக்கிறது.

அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த F-22 ராப்டர் போர் விமானங்களை முதன்முறையாக இஸ்ரேலில் நிறுத்தியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, தனது ராணுவக் கொள்கையில் பெரிய மாற்றத்தை செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

US Breaks 30-Year Taboo

ஈரான் பயம்

ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும், வளைகுடா நாடுகளில் ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகத்தான் இஸ்ரேலில் கொண்டு போய் தனது விமானத்தை அமெரிக்கா நிறுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த F-22 விமானங்கள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறனை மேலும் பலப்படுத்தும். ஆனால், இந்த நடவடிக்கையால் அரபு நாடுகள் ஜர்க் ஆகியுள்ளன. காரணம் இந்த விஷயம் குறித்து அமெரிக்கா வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.

F-22 ஜெட் விமானங்கள் இஸ்ரேலில் வந்திறங்கும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகின. அமெரிக்க விமானப்படையின் F-22, வானில் ஆதிக்கம் செலுத்தி, துல்லியமாகத் தாக்கி, குண்டுவீச்சு விமானங்களுக்குப் பாதுகாப்புப் பணியை செய்யக்கூடிய மிகத் திறமையான ஒரு போர் விமானம் இது.

ஈரான் மீது தாக்குல்

டிரம்ப், ஈரானின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்கள் மீது அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவேளை டிரம்ப் சொல்வதை ஈரான் கேட்கவில்லை எனில், ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க டிரம்ப் பிளான் போட்டு வருகிறார். இதற்கு முன்னரும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது.

ஆனால், கடந்த முறை போல, இந்த முறை தாக்குதல் ஏதேனும் நடத்தப்பட்டால் பழிவாங்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது. குறிப்பாக அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தது.

அரபு நாடுகள் அச்சம்

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தங்கள் நிலப்பரப்பையோ அல்லது வான்வெளியையோ அமெரிக்க படைகள் பயன்படுத்த கூடாது என்று கறாராக சொல்லிவிட்டது. இதனால், ஜோர்டானில் உள்ள முவாஃபாக் சால்டி போன்ற ராணுவத் தளங்களில் அமெரிக்கப் போர் விமானங்கள் குவிக்கப்படுவது பிரச்சனைகளை உருவாக்கும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது. இப்படி இருக்கையில் இஸ்ரேலில் தனது விமானங்களை நிலை நிறுத்தியன் மூலம், அமெரிக்காவுக்கு மாற்று வழி இருக்கிறது என்பதை டிரம்ப் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் பிரச்சனை

வரலாற்று ரீதியாக, அமெரிக்க தளபதிகள் அரபு நாடுகளுடன் தொடர்ந்து நட்பில் இருக்க வேண்டும் என்பதற்காக, தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க இஸ்ரேலுடன் ராணுவ ஒத்துழைப்பில் இருந்து விலகி இருந்தனர். ஏனெனில் இஸ்ரேலுக்கும்-அரபு நாடுகளுக்கும் சுத்தமாக செட் ஆகாது. ஆனால், 2021-க்கு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. இப்போது அமெரிக்க விமானங்கள் நேரடியாக இஸ்ரேலுக்கு வந்து இறங்கும் அளவுக்கு இந்த மாற்றம் நடந்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+