வன்முறையை தூண்டும் வகையில் டிரம்ப் பேச்சு... வரம்பு மீறி பேசுவதாக ஹிலாரி குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு குறித்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைவதையொட்டி, வரும் நவம்பர் 8-ம் தேதி புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் டொனால்ட் டிரம்ப்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இரு அதிபர் வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹிலாரி கிளிண்டன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டொனால்டு டிரம்ப் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
அதாவது, தற்காப்புக்காக தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமையை தான் அதிபரானால் ரத்து செய்துவிடுவேன் என்று ஹிலாரி கூறுகிறார். இதனால், துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை பறிபோய் விடும் நிலை ஏற்படுவதோடு, நபர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.
எனவே, துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்கள் நினைத்தால், அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெறுவதைத் தடுக்க முடியும் என்று டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப்பின் இந்த கருத்து வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், டொனாட் டிரம்ப் வரம்பு மீறி பேசுகிறனார் என ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஹிலாரி கிளின்டன் கூறியதாவது: எனது நண்ர்களே, வார்த்தைகள் மிக முக்கியமானவை. அதிபருக்கான போட்டியில் இருக்கும் போதோ அல்லது அமெரிக்காவின் அதிபராக இருந்தாலோ, நீங்கள் வெளியிடும் வார்த்தைகள் பல பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும். டொனால்ட் டிரம்பின் இது போன்ற ஒவ்வொரு சர்ச்சைக்குரிய சம்பவங்களும் அவர் அதிபர் பதவிக்கான குணத்தை கொண்டிருக்கவில்லை என்பதை காட்டுகிறது என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications