குஜராத் கலவர வழக்கு: அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு அமெரிக்கா நீதிமன்றம் சம்மன்!
நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக குஜராத் கலவர வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் மூலம் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை மோடி புரிந்துள்ளதாக அமெரிக்கா நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்பு ஒன்று மனுத்தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் சம்மனை பெற்ற 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த கெடுவுக்குள் பதில் அளிக்காவிட்டால் ஒரு தரப்பாக தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே மனித உரிமைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு சர்வதேச சட்டத்தின் படி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இடம் உண்டு.
அந்த வகையில் தொடரப்பட்டுள்ள மோடிக்கு எதிரான வழக்கில் 2002-ம் ஆண்டு கலவரத்தின் போது இஸ்லாமியர்களுக்கு எதிராக இனபடுகொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் நிருபிக்கபட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும். குஜராத் கலவரத்திற்கு பின்னர் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வந்தது.
9 ஆண்டு கால விசா தடை மோடி பிரதமரானதும் அமெரிக்க அரசால் விலக்கிகொள்ளப்பட்டது. பிரதமர் ஆனதும் மோடி முதல் முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாடடு மண்ணில் கால் வைப்பதற்கு முன்பாகவே நீதிமன்ற சம்மன் அனுப்பபட்டுள்ளது.
இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அமெரிக்கா சென்றிருந்த நிலையில் 1984ஆம் ஆண்டு சீக்கியர் கலவரம் தொடர்பாக வழக்கு தொடர்ப்பட்டு நீதிமன்றம் சம்மன்கள் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications