கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு- அமெரிக்காவில் மீண்டும் பெரும் வன்முறை!!
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் பெர்குசன் நகரில் கறுப்பின இளைஞரான மைக்கேல் பிரவுனை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி வில்சன் மீது விசாரணை நடத்த முடியாது என்று நீதிபதிகள் அறிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் நகரில் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி மைக் பிரவுன் என்ற கறுப்பின இளைஞரை போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் சுட்டுக்கொன்றார். இதனால் அப்போது அங்கு பெரும் வன்முறை வெடித்தது. கடைகள் சூறையாடப்பட்டன. பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
PHOTO: #Ferguson Walgreens set ablaze @PaulLewis pic.twitter.com/VC70vKICRZ
— Breaking911 (@Breaking911) November 25, 2014 இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி வில்சன் மீது மைக்கேல் பிரவுன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவடைந்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பை வழங்கினர். அதில் பிரவுனை சுட்டுக்கொன்றது தொடர்பாக வில்சன் மீது விசாரணை நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது.இத்தீர்ப்பு வெளியானவுடன் அங்கு திரண்டிருந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காவல்துறையினரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். போலீசார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அம்மாகாணத்தில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து ஆளுநர் நிக்சன் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் போராட்டக்காரர்களை பொறுமையாக கையாளுமாறு அதிபர் ஒபாமா காவல்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications