For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"உர்"ருன்னு முறைச்சுப் பார்த்த நாயை வெட்டிக் கூறு போட்ட கோபக்கார இளைஞர்!

Google Oneindia Tamil News

வெஸ்ட் பாம் பீச், புளோரிடா: அமெரிக்காவின் வெஸ்ட் பாம் பீச் பகுதியைச் சேர்ந்த ஜேவியர் ஓரெல்லி என்ற 28 வயது இளைஞரை, நாயை வெட்டிக் கொன்ற குற்றத்திற்காக போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நாய் தன்னை வினோதமாக முறைத்துப் பார்த்ததால் வெட்டிக் கொன்றதாக ஜேவியர் கூறியுள்ளார்.

அந்த நபர் மீது 2 பிரி்வுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

US man nabbed for killing a dog and duck

சம்பவத்தன்று போலீஸாருக்கு ஒரு தொலைபேசித் தகவல் வந்தது. அதில் பேசிய நபர், ஒரு இளைஞர் தனது நாயை கொடூரமாக தாக்கிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர்.

அவர்கள் போய்ப் பார்த்தபோது அந்த வீட்டின் தோட்டத்தில் ஒரு பெரிய கருப்பு நிற வாய் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்ததைக் கண்டனர். ஒரு சவழக்குழி தோண்டப்பட்டிருந்தது.

உடல் தனியாக கிடந்தது. துண்டிக்கப்பட்ட தலையை பெரிய கல்லுக்கு மேலே அந்த நபர் வைத்திருந்தார். அருகே பெரிய கத்திகள் இரண்டு கிடந்தன.

மேலும் தலைக்கு அருகே அந்த நாயின் உரிக்கப்பட்ட தோலையும் அந்த நபர் போட்டு வைத்திருந்தார். நாயை பலமாக அடித்த மரக் கட்டையும் அந்த இடத்திலேயே கிடந்தது.

அந்த நபரிடம் போலீஸார் விசாரித்தபோது நாய் என்னையே முறைத்துக் கொண்டிருந்தது. விநோதமாக பார்த்தது. மேலும் அது என்னைக் கடிக்கவும் முயற்சித்தது. இதனால்தான் கோபமடைந்து தாக்கினேன் என்றார்.

நாயை சரமாரியாக அடித்துக் கொலை செய்த ஜேவியர் அதன் பின்னர் தலையை பெரிய கத்தியை எடுத்து வந்து வெட்டி துண்டித்துள்ளார். செத்துக் கிடந்த நாய்க்கு அருகிலேயே இறந்த நிலையில் ஒரு வாத்தும் கிடந்தது. அதையும் ஜேவியரே கொன்றதாக கூறினாராம்.

அந்த ஊரில் பீட்டாக்காரங்க இல்லையோ?

English summary
A Florida man was accused of decapitating a dog that looked at him weird and arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X