அமெரிக்காவில் கருப்பர் இன இளைஞர் சுட்டுக் கொலை! பொதுமக்கள் கொந்தளிப்பு!!
மேடிசன்: அமெரிக்காவில் மீண்டும் கருப்பர் இன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பொதுமக்கள் கொந்தளித்து பெரும் போராட்டத்தில் குதித்துள்ள்ளனர்.
அமெரிக்காவில் கருப்பர் இன இளைஞர்கள் அந்நாட்டு போலீசாரால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர். போலீசின் இந்நடவடிக்கைக்கு எதிரான கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தி வரும் போதிலும் இந்த அடக்குமுறை ஓய்ந்துவிடவில்லை.

இந்நிலையில் டோனி ராபின்சன் என்ற 19 வயது கருப்பர் இன இளைஞர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் நேற்று கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தின் தலைநகரான மேடிசனில் மக்கள் பெருமளவில் திரண்டு போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பெர்குஷனில் கருப்பர் இன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.












Click it and Unblock the Notifications