ரஜத் குப்தாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

US Supreme Court rejects Rajat Gupta’s last bid to avoid jail
நியூயார்க்: அமெரிக்காவின் மிகப் பெரும் நிதி மோசடி வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற அமெரிக்கா வாழ் இந்தியரான ரஜத் குப்தாவின் ஜாமீன் மனுவை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை முறைகேடான வழிகள் மூலம் அறிந்து அந்த நிறுவன பங்குகளை வாங்கி அல்லது விற்று லாபம் அடைந்ததன் மூலம் 75 பில்லியன் டாலர்கள் மோசடி செய்தார் இலங்கை தமிழரான ராஜ ரத்தினம்.

அவருக்கு உதவியவர்தான் இந்தியராஜன் ரஜத் குப்தா. 62 வயதான ரஜத் குப்தா அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்பட்ட இந்தியர் ஆவார். புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்ஸைர் இன்வஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ், மெக்கிங்ஸ்லி நிதி அமைப்பு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களில் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்தார்.

கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனத்தில் தாம் இயக்குநராகப் பணிபுரிந்த போது நிறுவனத்தின் ரகசியத் தகவல்களை, ராஜராஜரத்தினத்துக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் ரஜத் குப்தா குற்றவாளி என்று அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதை எதிர்த்து அவர் நியூயார்க்கில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

அவரது மனுவை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம் ரஜத் குப்தாவின் குற்றத்தை செவ்வாய்க்கிழமை உறுதிசெய்து அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதனால் அவர் அடுத்த வாரம் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+