யுடிஎஸ் நடத்தும் குறும்பட போட்டி 2015: பதிவு செய்ய கடைசி நாள் செப். 10
துபாய்: யுடிஎஸ் அமைப்பு குறும்பட போட்டியை நடத்துகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் செப்டம்பர் மாதம் 10ம் தேதிக்குள் தங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
யுடிஎஸ் அமைப்பு குறும்பட போட்டியை நடத்துகிறது. சமூக விழிப்புணர்வு என்ற தலைப்பில் குறும்படம் இருத்தல் வேண்டும். படம் 1 முதல் 5 நிமிடங்கள் ஓட வேண்டும். தமிழை தவிர பிற மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கு ஆங்கிலத்தில் சப்-டைட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்த போட்டி மொத்தம் 3 சுற்றுகளாக நடக்கிறது. முதல் சுற்றில் வெற்றி பெறுபவர்கள் இரண்டாவது சுற்றில் பங்கேற்கலாம். இரண்டாவது சுற்று அக்டோபர் மாதம் 15ம் தேதி துவங்குகிறது. இறுதி மற்றும் மூன்றாவது சுற்று டிசம்பர் 1ம் தேதி துவங்குகிறது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளுக்கான தலைப்புகள் பின்னர் அறிவிக்கப்படும். சிறந்த படம், இயக்குனர், நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், துணை நடிகர், சிறந்த இசையமைப்பாளர், எடிட்டர் ஆகிய பிரிவுகளில் விருது அளிக்கப்படும்.
குறும்பட போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இது குறித்து
மேலும் விபரம் அறிய விரும்புவோர்- http://www.utrustus அல்லது http://www.utrustus.org/shortfilm2015.asp அல்லது www.synergyutsevents.com/shortfilm2015.asp அல்லது www.uaetamilsangam.com/shortfilm2015.asp ஆகிய இணையதளங்களுக்க சென்று பார்க்கவும்.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள்(இயக்குனர் அல்லது ஹீரோ) அதற்குரிய ஐடி கார்டை சமர்பித்தால் பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications