மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர.. லண்டன் விரைந்தது சிபிஐ குழு
யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் உரிமையாளருமான விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த சிபிஐ அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.
லண்டன்: ரூ.9,000 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பிய விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு லண்டன் போயுள்ளது.
இந்தியாவில் பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரூ.9,000 கோடி கடனை பெற்ற மல்லையா அவற்றை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். அவ்வப்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் அவர் தலைகாட்டி வந்தனர்.

அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் பலனில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி மல்லையா லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் வெஸ்ட்மிஸ்டர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது.
இந்நிலையில் அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. எனினும் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு காரணம், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான, அயல்நாட்டிடம் ஒருவரை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின் சிக்கலான செயல்முறைகள் தான்.
இந்நிலையில் ராகேஷ் அஸ்தானா தலைமையில் சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத் துறையினரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இங்கிலாந்துடன் விவாதிப்பதற்காக லண்டன் சென்றுள்ளனர். அவர்கள் இங்கிலாந்து சட்ட நிபுணர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
மேலும் இந்தியாவுக்கு இந்த வாரத்தில் வருகை தரவுள்ள இரு நாட்டு உள்துறை செயலாளர்கள் முன்னிலையில் மல்லையாவை நாடு கடத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications