வெடிமருந்துகளுடன் பாய்ந்து வந்த லாரி.. உயிரைக் காக்க ஓடிய மக்கள்.. தெருவெல்லாம் ரத்தம்!
பாரிஸ்: வெடி மரு்நதுகளுடன் கூட்டத்தை நோக்கி லாரி பாய்ந்து வந்ததாகவும், அதில் சிக்கி பலர் சிதைந்து போனதாகவும், உயிரைக் காக்க மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடியதாகவும் நைஸ் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
நைஸ் தாக்குதல் சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது. இங்கு நடந்தது போல எங்கும் நடக்கலாம் என்பதால் அத்தனை நாடுகளும் நைஸ் சம்வத்தால் அதிர்ந்துள்ளன.
உள்ளூரில் நடந்த பாஸ்டில் தினக் கொண்டாட்டத்திற்காக மக்கள் கூடியிருந்த நிலையில் துனிஷீயாவை பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பிய லாரியுடன் கூட்டத்திற்குள் அதி வேகமாக ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:

சிதறி ஓடிய மக்கள்
டொமினிக் மொலினா மற்றும் அவரது கணவர் டோனி ஆகியோர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்களது 14 வயது மகனுடன் தங்கியிருந்தனர். ஹோட்டல் பால்கனியிலிருந்து இந்த தாக்குதலை அவர்கள் நேரில் பார்த்தனர். மக்கள் உயிரைக் காக்க சிதறி ஓடியதாக இவர்கள் கூறுகின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில்
மொலினா கூறுகையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்து விட்டது. என்ன நடந்தது என்று ஊகிக்கக் கூட முடியவில்லை. தெரு முழுவதும் சிறிதுநேரத்தில் ரத்த வெள்ளமாக மாறிப் போனது.

அதிர்ச்சி அடைந்தோம்
எனது மகன் அதைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஆடிப் போய் விட்டான். நாங்களும்தான். வாழ்க்கையில் இப்படி ஒரு தாக்குதலை நான் பார்த்ததே இல்லை.
பலத்த சத்தம்
முதலில் லாரி மோதியபோது பெரும் சத்தம் கேட்டது. தொடர்ந்து துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்டது. அதையடுத்து நாங்கள் ஓடி வந்து பார்த்தோம்.மக்கள் சிதறி ஓடியதைக் காண முடிந்தது. புகை மண்டலமாக இருந்தது.
|
விழுந்த உடல்கள் மீது
இறந்து கிடந்த உடல்கள் மீதும் மக்கள் ஓடியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் உயிரைக் காக்க மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை. கிடைத்த இடத்தில் புகுந்து ஓடினார்கள்.
|
தெருவெல்லாம் உடல்கள்
அந்த இடம் முழுவதும் உடல்களாக கிடந்தன. ரத்தத் கறையாக அந்தத் தெருவே மாறிப் போயிருந்தது. போர்க்களம் போல அது காணப்பட்டது என்றார் அவர்.
|
தீவிரவாதி சுட்டுக் கொலை
இந்தத் தாக்குதலை நடத்திய நபரை பிரெஞ்சு போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர். அவரது உடலைக் கைப்பற்றி மேல் விசாரணை நடந்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications