எங்கள் நண்பர்கள் பிணமாகக் கிடந்ததை பார்த்தோம்: மீட்கப்பட்ட பெஷாவர் பள்ளி மாணவர்கள் கதறல்
பெஷாவர்: பள்ளிக்கூடத்தில் எங்களின் நண்பர்கள் இறந்து கிடந்ததை பார்த்தோம் என்று பாகிஸ்தானில் தாலிபான்கள் தாக்குதல் நடத்திய பள்ளியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 100 குழந்தைகள் உள்பட 126 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும் 122 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பள்ளியில் இருந்து மீட்கப்பட்டுள்ள குழந்தைகள் கூறுகையில்,
நாங்கள் வகுப்பறையில் இருக்கையில் திடீர் என்று தூப்பாக்கிச்சூடு நடத்தும் சப்தம் கேட்டது. அப்போது தான் 7 முதல் 8 பேர் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. உடனே எங்களை ஒரு ஓரத்தில் அமர வைத்தார் ஆசிரியர். பின்னர் தலைமை ஆசிரியரின் அறிவுரைப்படி ஆசிரியர்கள் எங்களை பின் நுழைவாயில் வழியாக வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே எங்கள் நண்பர்கள் பிணமாகக் கிடந்ததை பார்த்தோம் என்றனர்.












Click it and Unblock the Notifications