"சண்ட செய்வோம்.." ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் - சூளுரைத்த உக்ரைன் அதிபர்!
கிவி: உக்ரைன் ரஷ்யா போர் உச்சகட்டத்தை எட்டிவரும் நிலையில், ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் ரஷ்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக போர் சூழல் நிலவி வந்தது. பேச்சுவார்த்தைகள் ஏற்படாமலேயே இன்று காலை உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.

தாக்குதல்
ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகிறது. கிழக்குப் பகுதி மற்றும் தலைநகர் கிவி மீது தொடர் தாக்குதல் நடத்துகிறது ரஷ்யா. இந்நிலையில், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதிலுக்கு ரஷ்யாவும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

விளாதிமர் புதின்
தாக்குதல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. உக்ரைனின் கிரிமியாவைக் கைப்பற்றி ரஷ்யாவுடன் இணைக்க புதின் நினைக்கிறார். ஆனால் உக்ரைன் அதற்கு சரிசமமாக பதிலடி கொடுத்து வருகிறது.

உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, நடந்து வரும் போர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''ரஷ்ய அதிபர் எங்கள் வீரர்களை திரும்பிப்போக சொல்கிறார். ஆனால், ஒருபோதும் ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம்'' என திட்டவட்டமாக கூறி உள்ளார். மேலும் ரஷியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

பிரிவினைவாதிகள்
ரஷ்யாவுக்கு ஆதரவாக கிழக்கு உக்ரைனில் சில கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 2014க்குப் பிறகு ரஷ்ய ஆதரவு அதிபர் மாற்றப்பட்டதும், இந்த கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஷ்யா உக்ரைன் போர் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் நகரங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடங்கினார்கள். லுஹான்ஸ்கில் 2 நகரங்களை ரஷியா ஆதரவு பிரிவினைவாதிகள் கைப்பற்றி உள்ளனர்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications