"ரம்ஜான் பண்டிகை".. சவுதி அரேபியாவில் பிறை தெரிவது எப்போது தெரியுமா? வானியல் ஆர்வலர்கள் விளக்கம்
ரியாத்: இஸ்லாமிய காலண்டரின்படி வரும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆனால் ரம்ஜான் பண்டிகை என்பது பொதுவாக பிறை தெரிவதன் அடிப்படையில் ஒருநாள் முன்பு அல்லது ஒரு நாளைக்குபிறகு கூட கொண்டாடப்படும். அந்த வகையில் சவுதி அரேபியாவில் இன்று முதல் பிறை பார்க்கப்பட உள்ளது. அங்கு எப்போது பிறை தெரியும்? என்பது பற்றி சவுதி அரேபியாவின் வானியல் ஆர்வலர்கள் முக்கிய தகவலை தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. தற்போது ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். நாள் முழுவதும் அவர்கள் உணவு உண்ணாமல் உடலை வருத்தி நோன்பு பின்பற்றி வருகின்றனர்.

ரமலான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை உணவு எடுத்து கொள்வது இல்லை. அதன்பிறகு தினமும் இஃப்தார் விருந்துடன் நோன்பை முடிப்பார்கள்.
தற்போது இஸ்லாமியர்களின் நோன்பு காலம் முடிவுக்கு வர உள்ளது. இஸ்லாமியர்களின் காலண்டரின்படி மார்ச் 31ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் ரம்ஜான் தேதி என்பது மாற்றமடையும். வானில் பிறை தெரிவதன் அடிப்படையில் தான் ரம்ஜான் தேதி என்பது நிர்ணயம் செய்யப்படும். அதன்படி பார்த்தால் இந்த ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கான பிறை எப்போது தெரியும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்லாமியர்களை பொறுத்தவரை சவுதி அரேபியா புனித இடமாக உள்ளது. சவுதி அரேபியாவில் தான் மெக்கா மற்றும் மதீனா உள்ளிட்ட இடங்கள் உள்ளன. இஸ்லாமியர்களில் ஒருபகுதியினர் சவுதி அரேபியாவில் தெரியும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் கொண்டாடி வருகின்றனர். இதனால் தற்போது சவுதி அரேபியாவில் எப்போது பிறை தெரியும்? என்பது பற்றி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் வானியல் ஆர்வலர்கள் கூறுகையில், ‛‛ஷவால் பிறை அடிப்படையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாடி வருகின்றனர். இந்த பிறை என்பது மார்ச் 29 (அதாவது இன்று) வானில் தெரியும். இன்று 2 மணிக்கு தெரிய தொடங்கும். சூரிய உதயத்துக்கு பிறகு 8 நிமிடங்கள் வரை இந்த பிறை இருக்கும். இதனால் சவுதி அரேபியாவில் ரம்ஜான் பண்டிகை என்பது மார்ச் 30ம் தேதி கொண்டாடப்பட வேண்டும். ஆனால் புதிய பிறை என்பது பூமியில் இருந்து பார்த்தால் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் டெலஸ்கோப் வழியாக கூட பார்க்க முடியாது. இதனால் இன்று வானில் பிறை உருவானாலும் கண்களுக்கு தெரியாது. எனவே நாளைய தினம் பிறை தெரியும்'' என கூறியுள்ளனர்.
அதாவது வானில் இன்று ஷவால் இஸ்லாமிய மாதத்துக்கான பிறை தோன்றினாலும் கூட அது நம் கண்களுக்கு தெரியாது. இதனால் பிறை உருவாகவில்லை என்ற அடிப்படையில் நாளை பிறை பார்க்கப்படும். நாளை பிறை தெரியும்பட்சத்தில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் அவுதி அரேபியாவின் வானியல் ஆர்வலர்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications