ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை ..பல இடங்களில் அலை அலையாக புக தொடங்கிய கடல் நீர்.. வீடியோ
டோக்கியோ: இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்ம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நலையில, ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் கடல் நீர் வரத்தொடங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் மேற்கு பகுதியான இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மேற்கு கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருகிறது. இதனால் "அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும்" என்று என்.எச்.கே. என்ற ஜப்பானின் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.
ஜப்பானின் இஷிகாவா, நிகாடா, டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்களை உடடினாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் அலை அலையாக புக தொடங்கியுள்ளது. இதனால் ஜப்பான் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் வர தொடங்கிய கடல் நீர்
— velmurugan (@velmurugantheni) January 1, 2024
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் அலை அலையாக புக தொடங்கியுள்ளது pic.twitter.com/DbDdLlN6LR
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மேற்குக் கடலோரம் உள்ள அனைத்து ஜப்பானிய நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மட்டுமல்லாது தென் கொரியா, செர்பியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதுது.
富山市 萩浦橋 津波到達中 pic.twitter.com/5TJkH4E1Mx
— 鈴木 一 (@hioooomn) January 1, 2024
கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளபோது டெக்டானிக் தகடுகள் ஒன்றோடு மோதாமல் ஒன்றின் மீது ஒன்றாக எழுந்தால் சுனாமி அலைகளின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்கிறார்கள். இதனிடையே இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 5 முதல் 7 மீட்டர் அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்றும் மக்கள் உடனடியாக கடற்கரையோரங்களில் இருந்து வெளியேறி மிக உயரமான கட்டிடங்களில் உச்சிக்கு சென்றுவிடுமாறு ஜப்பான் வானிலை மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பசுபிக் பெருங்கடலை ஒட்டி அமைத்துள்ள ஜப்பானில் அடிக்கடி இதுபோல் சுனாமி வருவதும், நிலநடுக்கம் வருவதும் இயல்பான ஒன்றாக உள்ளது.
அங்குள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்பதால் பெரிய அளவில் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது, அதேநேரம் சுனாமி குறித்து முறையான எச்சரிக்கையும் வழங்கப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications