அதிர்ந்து கொண்டே இருக்கும் இந்தோனேஷியா..30 நாளில் 1,440 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது ஏன்? ஷாக் தகவல்
ஜகர்தா: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் கடந்த 30 நாளில் இந்தோனேஷியாவில் 1,440 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேஷியாவை மையப்படுத்தி இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
‛சென்யார்' புயலால் ஏற்கனவே இந்தோனேஷியா பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ராவில் மட்டும் 25 பேர் வரை பலியாகி உள்ளனர். தற்போது மீட்பு பணிகள், நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தேனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று திடீரென்று பூமி குலுங்கியது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தோனேஷியா தொடர்ந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 நாளில் மட்டும் இந்தோனேஷியாவில் மொத்தம் 1,440 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய
காரணம் அதன் அமைவிடம் தான்.
இந்தோனேஷியா பசிபிக் நெருப்பு வளையம் என்ற புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளது. உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 90 சதவீதம் இந்த மண்டலத்தில் தான் பதிவாகிறது. அந்த வகையில் தான் இந்தோனேஷியாவில் கடந்த 30 நாட்களில் 1,400 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 250 நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவுக்கு மேலாக பதிவாகி உள்ளது. இது இந்தோனேஷியா மக்களை கவலையடைய செய்துள்ளது.
குறிப்பாக கடந்த 2004ம் ஆண்டில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 9.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. அப்போதுசுனாமி ஏற்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இறந்தனர். ஆனால் சமீபத்திய நிலநடுக்கங்கள் சுனாமி உள்பட எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications