"டெட்லைன்".. நடந்து போங்க! இந்தியர்களை மிரட்டிய உக்ரைன்? புடினுக்கு போனை போட்ட மோடி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் நேற்று ஐநா பொது சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் இந்த வாக்கெடுப்பு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்காமல் விலகிக்கொண்டது. ரஷ்யாவிற்கு எதிராக 141 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யாவிற்கு ஆதரவாக 5 நாடுகள் வாக்களித்தது. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிக்கவில்லை.

கார்கிவ் ஏன் முக்கியம்

கார்கிவ் ஏன் முக்கியம்

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தற்போது கார்கிவ் பகுதியில் நடந்து வருகிறது. இது ரஷ்யா எல்லையில் இருக்கும் பகுதியாகும். இதனால் இங்கு கடுமையான மோதல் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பகுதியை பிடிப்பது ரஷ்யாவிற்கு எல்லை ரீதியாக பெரிய வசதியை கொடுக்கும். உக்ரைனை அதன் கிழக்கு பக்கத்தில் இருந்தும் பிடிக்க வசதியாக இருக்கும். இதனால் அங்கு கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் ஏற்கனவே இந்தியர் மரணம்

ஆனால் ஏற்கனவே இந்தியர் மரணம்

உக்ரைனில் நடக்கும் இந்த தாக்குதல்கள் காரணமாக ஏற்கனவே நவீன் என்ற கர்நாடகாவை சேர்ந்த மாணவர் உக்ரைனில் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் உடனடியாக தலை நகர் கீவில் இருக்கும் இந்தியர்களை வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டது. அதேபோல் அங்கிருந்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டனர். அதை தொடர்ந்து கார்கிவ் பகுதியில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு முயன்றது.

டெட்லைன்

டெட்லைன்

ஆனால் அங்கு தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வந்தது. ரஷ்யா பீரங்கி தாக்குதல்களை நடத்தியது.இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை ரஷ்யாவிடம் சில மணி நேரங்கள் தாக்குதலை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தது. இந்தியர்களை வெளியேற்றும் வரை தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கார்கிவ் பகுதியில் தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணி வரை மக்களை வெளியேற்ற டெட்லைன் கொடுக்கப்பட்டது.

உக்ரைன் கொடூரம்

உக்ரைன் கொடூரம்

இதையடுத்து இந்தியர்கள் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற முயன்றனர். பலர் ரயில் நிலையங்களுக்கு சென்றனர். ஆனால் உக்ரைன் நாட்டுக்கு இந்தியா ஆதரவு தரவில்லை என்ற கோபத்தில் இந்தியர்கள் மீது ஆங்காங்கே உக்ரைன் மக்கள், ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்றும் கூட இந்தியர்களை ரயிலில் ஏற விடாமல் கடுமையாக தாக்கி உள்ளனர். அதோடு நடந்து வாருங்கள் என்றும் கூறி மிரட்டி உள்ளனர். ரயிலில் இடம் கேட்ட இந்திய பெண்களை துப்பாக்கி காட்டி மிரட்டி உள்ளனர்.

 அவசர போன் கால்

அவசர போன் கால்

இந்த விஷயம் தெரிந்த உடனேதான் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுக்கு போன் போட்டார். ரஷ்யா நினைத்தால் உக்ரைன் படைகளை அடக்கி, இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடியும். இதனால் உடனடியாக அவர் அதிபர் புடினுக்கு போன் செய்தார். இந்தியர்களுக்காக ரஷ்ய ராணுவம் கான்வாய் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். சில இடங்களில் சிக்கி உள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

அதிபர் புடின் உத்தரவு

அதிபர் புடின் உத்தரவு

அதன்படியே ரஷ்ய அதிபர் புடின் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவி செய்வோம் என்று உறுதி அளித்தார். ஹெலிகாப்டர், விமானம் மூலம் மீட்க முடியாது. மிஸைல் தாக்குதல் நடக்கலாம். தரைவழியாக மீட்கிறோம் என்று புடின் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே இந்திய மக்கள் பலரை ரஷ்ய ராணுவம் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி அவர்களை மீட்டு உள்ளது. ஆனால் இன்னும் அங்கு பலர் இருக்கிறார்கள்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

கார்க்கிவ் நகரத்தில் இன்னும் பலர் சிக்கி உள்ளனர். அங்கு மீண்டும் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரபடுத்தி உள்ளது. இதனால் இந்தியர்கள் பலர் முகாம்களில் தங்கி உள்ளனர். இன்னும் பலர் பங்கர்களில் பதுங்கி உள்ளனர். இதனால் கார்கிவ் பகுதியில் கொஞ்சம் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+