ஏமாற்றிய காதலனைக் கொன்று இதயத்தை வெளியில் எடுத்த காதலி... தூக்குதண்டனை விதித்த கோர்ட்!
டாக்கா: காதலித்து ஏமாற்றிய காதலனை கொலை செய்து இதயத்தை வெட்டி எடுத்த காதலிக்கு வங்காள தேச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
வங்காள தேசத்தை சேர்ந்தவர் பாத்திமா அக்தர் சோனாலி என்ற இளம்பெண். இவரும், ஷிபான் என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். காதலர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றித் திரிந்தனர். ஏறக்குறைய திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவியாக இருவரும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், திடீரென ஷிபானின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. சோனாலியைத் திருமணம் செய்ய அவர் மறுப்புத் தெரிவித்தார்.
அதோடு, தங்கள் இருவருக்கும் இடையேயான அந்தரங்க உறவை ரகசியமாக ஷிபான் அவரது லேப்டாப்பில் பதிவு செய்து இருந்தார். இது போன்று பல பெண்களுடன் வைத்திருந்த உறவும் அதில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த சோனாலி ஆத்திரமடைந்தார்.
தன்னைக் காதலித்து ஏமாற்றிய ஷிபானை அவர் பழி வாங்கத் திட்டமிட்டார். அதன்படி, குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து ஷிபானை மயங்க வைத்தார். பின்னர் அவரை வெட்டிக் கொலை செய்த சோனாலி, ஷிபானின் இதயத்தை கத்தியால் வெட்டி வெளியே எடுத்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சோனாலியைக் கைது செய்தனர். இந்த வழக்கு குல்னா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போது, ‘ஷிபானுக்கு பெரிய இதயம் இருக்க வேண்டும் என கருதியதாக தெரிவித்த சோனாலி, அதன் அளவை பார்க்கவே வெளியே எடுத்ததாக' தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, காதலரைக் கொடூரமாகக் கொன்ற சோனாலிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
வங்கதேசத்தில் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் பெண் குற்றவாளி சோனாலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications