பிரான்ஸில் 80 வயது கணவரை கொன்று அவரது இதயம், மூக்கு, ஆணுறுப்பை சமைத்த 71 வயது பாட்டி
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் 71 வயது மூதாட்டி ஒருவர் தனது 80 வயது கணவரை கொலை செய்து அவருடைய மூக்கு, இதயம் மற்றும் ஆணுறுப்பை சமைத்துள்ளார்.
பிரான்ஸின் வடக்கு பகுதியில் உள்ள லாங்வி நகரைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி தனது 80 வயது கணவரை உலக்கையால் அடித்துக் கொலை செய்துள்ளார். கொலை செய்ததோடு மட்டும் அல்லாமல் இறந்த கணவரின் இதயம், மூக்கு மற்றும் ஆணுறுப்பை அறுத்து ஒரு பானையில் போட்டு சமைத்துள்ளார். ஆனால் அவற்றை அவர் சாப்பிட்டாரா என்பது தெரியவில்லை.
அவர் எதற்காக கணவரை கொலை செய்தார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அந்த மூதாட்டியை கடந்த மே மாதம் 22ம் தேதி கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கரோலின் தெரிவித்துள்ளார்.
கொலைக்கு அவரை பொறுப்பாளியாக்குவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூதாட்டிக்கு மனநல பரிசோதனை செய்யப்பட உள்ளது.