இந்தோனேஷியா: 10 வயதில் 192 கிலோ எடை... உலகத்தின் பருமனான சிறுவன் இவர்தான்
ஜகர்தா: இந்தோனேஷிய நாட்டில் 10 வயதான சிறுவன் 192 கிலோ எடையுடன் உலகிலேயே அதிக பருமனான சிறுவனாக அழைக்கப்டுகிறார்.
இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள் சிபுர்வாசாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ரோகையா, அடே தம்பதி. இவர்களின் மகன் ஆர்ய பெர்மானா . 10 வயதே ஆகும் அந்த சிறுவனின் எடை தற்போது 192 கிலோவாக உள்ளது. இந்த சிறுவன் தினமும் 5 வேளை சாப்பிடுகிறானாம். அரிசி உணவு மற்றும் இறைச்சி, மீன், மாட்டுக்கறி, காய்ககறிகள் என அனைத்தையும் சாப்பிடுகிறான். இரண்டு பெரியவர்கள் சாப்பிடும் ஒருநாள் சாப்பாட்டை அந்த சிறுவன் ஒரு நாளைக்கு சாப்பிடுகிறான்.
பருமனான உடல் காரணமாக அந்த சிறுவனால் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. ஆடை அணிய முடியவில்லை. ஆர்ய பெர்மனாவின் அதிக எடைக்கு காரணம் என்ன என மருத்துவர்களிடம் சென்று பரிசோதத்துள்ளனர். ஆனால், சிறுவனின் இந்த அசாதாரணமான வளர்ச்சிக்கு என்ன காரணம் என்பதை கண்டறியமுடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.