கோரோனா கோரத் தாண்டவம்.. சிகிச்சையளித்தவர்களையும் காவு கேட்கிறது.. வுஹான் மருத்துவமனை இயக்குநர் பலி
Recommended Video
பீஜிங்: சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,868 ஆக உயர்ந்தது, கடந்த 24 மணி நேரத்தில், 98 பேர் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனர்.
உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 72,436 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் பலியானவர்களில், 93 பேர் வைரஸ் பரவத் தொடங்கிய மையப்பகுதியான ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள், ஹெனானை சேர்ந்த மூன்று பேரும், ஹெபீ மற்றும் ஹுனானில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹூபேயில், 1,807 புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கொடுமையின் உச்சமாக, வுஹான் பகுதியிலுள்ள ஒரு மருத்துமனையின் இயக்குநரும், கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளார்.
வுஹானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் செவ்வாய்க்கிழமை காலை பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது சிகிச்சை முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் லியு ஜிமிங் இறந்தார் என்று சீன அரசின் ஊடகம் சி.சி.டி.வி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் இறந்த முதல் மருத்துவமனை இயக்குனர் இவர் என்பது பெரும் சோகம்.
இதனிடையே, மார்ச் 2 முதல் அமெரிக்க மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வரியை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நடந்து வந்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி வரிகளை தாறுமாறாக கூட்டிக் கொண்டன. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா, இந்த மருத்துவ உபகரணங்களை, சீனா அனுப்பி வைத்துள்ளது. அவற்றுக்கான வரியை சீனா ரத்து செய்ய முன்வந்துள்ளது.
நோயாளி மானிட்டர்கள், ரத்தமாற்று உபகரணங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவிகள் ஆகியவை வரி விலக்கு பெற தகுதிவாய்ந்த உபகரணங்களில் அடங்கும்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications