என்னாது கொரோனா எங்கள் லேபிலிருந்து தப்பியதா.. அதெல்லாம் வெறும் கட்டுக் கதை.. வுகான் லேப்
பெய்ஜிங்: கொரோனா எங்கள் பரிசோதனை கூடத்திலிருந்து வெளியேறியதாக கூறப்படுவது சுத்த கட்டுக் கதை என ஒருவழியாக வுகான் பரிசோதனை கூடம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் மீன் சந்தையிலிருந்து வெளியேறியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகில் உள்ள 170 நாடுகளுக்கும் மேலாக பரவி இதுவரை 3.45 லட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்!
கசிந்து
இந்த நிலையில் அமெரிக்காவின் ஊடகமான பாக்ஸ் நியூஸ், இந்த கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என்றும் அது வுகான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வுக் கூடத்திலிருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டது. அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவி வருகிறது என செய்தி வெளியிட்டது.
வெளியுறவுத் துறை அமைச்சர்
இதே விவகாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்பும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் கூறி வந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். அது போல் வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து சீனாவும் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
வைரஸ்
இந்த நிலையில் இதுகுறித்து வுகான் பரிசோதனை கூடத்தின் இயக்குநர் வாங் யான்ங்யி கூறுகையில் கொரோனா வைரஸ் எங்கள் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்ததாக கூறுவது வெறும் கட்டுக் கதை ஆகும். கொரோனா வைரஸை நாங்கள் வைத்திருக்கவில்லை. அந்த வைரஸை நாங்கள் ஆராய்ச்சி செய்யவும் இல்லை.
பரபரப்பு
அந்த வைரஸ் இருப்பது கூட எங்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியிருக்கும் போது அந்த வைரஸ் எப்படி எங்கள் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்திருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தனை நாட்கள் அமெரிக்கா குற்றச்சாட்டு பதில் தராமல் இருந்த வுகான் பரிசோதனை கூடம் தற்போது மறுத்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.