For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானம் கீழே விழுந்துட்டா?: மலேசிய விமானத்தில் ஏறும் முன்பு அம்மாவிடம் கேட்ட சிறுவன்

By Siva
Google Oneindia Tamil News

ஆம்ஸ்டர்டாம்: மலேசிய விமானத்தில் பயணம் செய்து பலியான 11 வயது நெதர்லாந்து சிறுவனுக்கு விபத்து நடக்கும் என்று ஏற்கனவே தோன்றியிருக்கிறது.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே வசித்தவர் மிகுல் பண்டுவினாடா(11). அவரும், அவரது சகோதரர் ஷகாவும் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கடந்த 16ம் தேதி கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினர். அந்த விமானம் உக்ரைனில் தாக்கப்பட்டதில் சகோதரர்கள் இறந்துவிட்டனர்.

மிகுலும் அவரது சகோதரரும் இந்தோனேசியாவில் இருக்கும் பாலியில் வசிக்கும் பாட்டியை பார்க்க கிளம்பி பலியாகிவிட்டனர்.

கேள்விகள்

கேள்விகள்

விமானத்தில் செல்வதற்கு முந்தைய நாள் மிகுல் தனது தாய் சமீராவிடம் மரணம், உயிர், கடவுள் பற்றி பல கேள்விகளை கேட்டுள்ளான்.

கால்பந்து

கால்பந்து

பயணம் செய்வதற்கு முந்தைய நாள் மிகுல் கால்பந்து விளையாடியுள்ளான். அப்போது அவன், ஒருவர் எப்படி இறப்பார்கள், என்னை புதைத்தால் என் உடலுக்கு என்ன ஆகும்? என் உயிர் கடவுளிடம் செல்வதால் எனக்கு எதுவும் தெரியாதா? என்று எல்லாம் கேட்டுள்ளான்.

அம்மா

அம்மா

இரவில் மிகுல் தனது தாயிடம் வந்து அம்மா, நான் உங்களை கட்டிபிடிக்கலாமா என்று கேட்டுள்ளான். உடனே சமீரா தனது மகனை தனக்கு அருகில் தூங்க வைத்துள்ளார்.

விமான நிலையம்

விமான நிலையம்

விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை சோதனை செய்யும் இடத்திற்கு சென்ற மிகுல் ஓடி வந்து தனது தாயை கட்டிப்பிடித்து நான் உங்களை மிஸ் பண்ணுவேன். விமானம் விபத்துக்குள்ளானால் என்ன ஆகும் என்று கேட்டுள்ளான்.

ஏன்?

ஏன்?

மிகுல் ஏன் மரணம், உயிர், விமான விபத்து பற்றி எல்லாம் பேசுகிறான் என்று சமீரா வியந்துவிட்டு அப்படி எல்லாம் பேசாதே, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று மகனிடம் தெரிவித்துள்ளார்.

திரும்பிப் பார்த்து

திரும்பிப் பார்த்து

மிகுல் விமானத்தில் ஏறச் செல்லும்போது தனது தாயை திரும்பித் திரும்பி பார்த்துள்ளான்.

மயக்கம்

மயக்கம்

மகன்களை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்த சமீராவுக்கு விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு மயக்கம் வந்தது.

ரேஸ் டிரைவர்

ரேஸ் டிரைவர்

ஷகா டெக்ஸ்டைல் என்ஜினியராகவும், மிகுல் கோ கார்ட் ரேஸ் டிரைவராகவும் ஆக விரும்பியுள்ளனர்.

சமீரா

சமீரா

என் மகனுக்கு எப்படி அது தெரிந்தது? நான் அவன் பேச்சை கேட்டிருக்க வேண்டும். நான் அவன் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும் என்றார் சமீரா கண்ணீர் மல்க.

English summary
A 11-year old Malaysian airlines crash victim had a premonition of the crash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X