Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாம்சங் தொழிலாளர்கள் 625 பேர் மீது பாய்ந்தது வழக்கு.. அனுமதியின்றி கூடியதால் போலீசார் ஆக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 625 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய ஊழியர்கள் மீது அனுமதியின்றி கூடியதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதியத்தை உயர்த்தி வழங்கவும், தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கவும், 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

samsung protest kanchipuram

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்ந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா, சி.வெ.கணேசன் ஆகியோர் அடங்கிய குழு மற்றும் சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகள், போராட்டக் குழுவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் 14 அம்ச கோரிக்கைகளுடன் ஊழியர்களில் ஒரு தரப்புக்கும், சாம்சங் நிர்வாகத்தினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், சிஐடியூ சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்காததால் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்களை காவல்துறையினர் நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர். தொடர்ந்து இன்று காலை போராட்டக் களத்தில் கூடிய சாம்சங் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், சி.ஐ.டி.யு தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 625 மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடையை மீறி குவிந்தது உள்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+