குளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்
குழந்தை வரம் வேண்டி வந்த தம்பதியிடம் போலி சாமியார் நகைகளை அபேஸ் செய்தார்.
காஞ்சிபுரம்: "குளிச்சிட்டு நகைகளை போட்டுக்குங்க.. அந்த பாழடைந்த பங்களாவுக்கு நடுராத்திரி வந்து கண்ணை மூடி சாமி கும்பிடுங்கள்... உங்களுக்கு குழந்தை பிறக்கும்" என்று டுபாக்கூர் சாமியார் சொன்னதை நம்பிய தம்பதிகளின் செய்திதான் இது.
மதுராந்தகம் அடுத்துள்ள ஊர் புதூர் கிராமம். இங்கு வசித்து வரும் தம்பதி பிரபாகரன்-ஜானகி. பிரபாகரன் பெயின்டராக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கல்யாணமாகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.
அதனால் பலரிடம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டனர். அப்போது, காஞ்சிபுரம் அடுத்த தாமரைத் தாங்கல் பகுதியில் பாபு என்ற சாமியாரை சென்று பார்க்குமாறு ஒருசிலர் சொன்னார்கள். அதை நம்பி மனைவியை அழைத்துகொண்டு சாமியாரை சந்தித்தார் பிரபாகரன்.

குழந்தை வரம்
அப்போது சாமியார், "பவுர்ணமி அன்று யாகம் நடத்த வேண்டும். தம்பதி இருவரும் குளித்துவிட்டு, நகைகளை அணிந்து கொண்டு யாகத்துக்கு தயாராக வேண்டும். இரண்டு பேர் தவிர இந்த யாகத்தில் வேறு யாரும் இருக்க கூடாது. அந்த விசேஷ யாகம் நடத்திவிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றார்.

புதிய வீடு
இதை நம்பி பிரபாகரனும், ஜானகியும் குளித்துவிட்டு, நகைகளை முழுக்க அணிந்துகொண்டு, ராத்திரி 11 மணிக்கு பாபுவை பார்க்க சென்றனர். அப்போது ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டு வரும் ஒரு புதிய வீட்டுக்கு இருவரையும் அழைத்து சென்றார்.

10 சவரன் நகை
பிறகு கண்ணை மூடிக் கொண்டு சாமி கும்பிடுங்கள் என்றதும், தம்பதியும் பயபக்தியுடன் கண்களை மூடி கும்பிட ஆரம்பித்தனர். அப்போது பாபு, திடீரென்று ஒரு பெரிய கல்லை கொண்டு வந்து பிரபாகரனையும், ஜானகியையும் பலமாக தாக்க ஆரம்பித்தார். இதில் நிலைகுலைந்து விழுந்தபோது, கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு எஸ்கேப் ஆனார் டுபாக்கூர் பாபு.

வழக்கு பதிவு
இதையடுத்து படுகாயமடைந்த தம்பதி கூச்சல் போடவும், அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சாமியார் பாபுவை தேடி வருகிறார்கள்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications