காஞ்சிபுரம் அண்ணா இல்லத்தை பார்வையிட்ட கமல்ஹாசன்.. பார்வையாளர் புத்தகத்தில் எழுதியது என்ன?

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணா நினைவு இல்லத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்றிருந்தார்.

எதிர்வரும் 2021 சட்டசபை தேர்தலையொட்டி பிரச்சாரத்தை மதுரையில் இருந்து தொடங்கினார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். கடந்த டிசம்பர் 13-ஆம்தேதி தொடங்கிய அவர் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து முடித்தார்.

Kamal Haasan visited Anna house at Kanchipuram

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவர் பிள்ளையார்பாளையம், ஓரிக்கை, கீழம்பி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை செய்தார். முன்னதாக அவர் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவில்லத்திற்கு சென்றார்.

Kamal Haasan visited Anna house at Kanchipuram

அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் அண்ணாவின் மார்பளவு சிலையை கண்டார். இதையடுத்து அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

Kamal Haasan visited Anna house at Kanchipuram

அதில் தனது பெயரை எழுதிய கமல்ஹாசன், அந்த புத்தகத்தில் ஒரு குறிப்பையும் எழுதினார். காஞ்சித் தலைவன் வீட்டில் நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன், தொலைந்தேன் அன்பால்- கமல்ஹாசன் 2020 என எழுதியுள்ளார். இதையடுத்து அவர் தறி நெய்பவர்களையும் சந்தித்து பேசினார்.

Kamal Haasan visited Anna house at Kanchipuram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+