ஒரே மேடையில் மு.க.ஸ்டாலினும்..சைதை துரைசாமியும்.. பங்காரு அடிகளார் இல்ல விழா..!
Recommended Video
காஞ்சிபுரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் இல்ல மணவிழாவில் மு.க.ஸ்டாலினும், சைதை துரைசாமியும் ஒரே மேடையில் நின்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
பக்தர்களால் அம்மா என்றழைக்கப்படும் பங்காரு அடிகளாருக்கு இரண்டு மகன்கள். மூத்தமகன் பெயர் அன்பழகன், இளையமகன் பெயர் செந்தில்குமார். அன்பழகன் அதிமுக அனுதாபியாக இருந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அரசியல் வாசம் இல்லாமல் இருந்துவருகிறார்.

பங்காரு அடிகளாரின் இளையமகன் செந்தில்குமார் தொடக்கம் காலம் முதலே திமுக ஆதரவாளர். கோபாலபுரம் இல்லத்திற்கு அடிக்கடி சென்று வரக்கூடியவர். மேலும், தனது சொத்து பஞ்சாயத்தை தீர்த்து வைக்க ஒரு காலத்தில் கருணாநிதியை நாடியவர் செந்தில்குமார். மேலும், திமுக தலைமையுடனும் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார் செந்திகுமார்.
இவரது மகளுக்கு நேற்று மேல்மருவத்தூரில் திருமணம் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர் மணமக்களை வாழ்த்துவதற்காக மேடையேறிய நேரத்தில் அந்த மேடையில் சைதை துரை சாமி நின்று கொண்டிருந்தர். ஸ்டாலின் வருகையை பார்த்து மேடையில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி.

சைதை துரைசாமியை பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன் கீழே இறங்க விடவில்லை..வாங்கண்ணே, வந்து நில்லுங்க..ஏன் போறீங்க என பிடித்து வைக்க, தர்ம சங்கடத்தில் நெளிந்த சைதை துரைசாமி, ஸ்டாலினுக்கு பக்கவாட்டில் வேறு வழியின்றி நின்று புகைப்படத்தில் தான் பளீச்சென வராதபடி கவனமாக இருந்துகொண்டார்.
இதனைக் கவனித்த திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, தாமோ அன்பரசன் ஆகியோர் சைதை துரைசாமியை கலாய்த்து விட்டு சென்றனர்.
2011 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து வழக்குத்தொடர்ந்தவர் சைதை துரைசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications