சுங்கச் சாவடியில் மோதல்… தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகனுடன் வாக்குவாதம்
Recommended Video

காஞ்சிபுரம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுடன், சுங்கச்சாவடி ஊழியர்கள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், வேல்முருகனின் கார் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அப்பகுதியில் திரளத் தொடங்கினர். தகவல் அறிந்து வந்த போலீசார் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அடித்து நொறுக்கினர்.
இதுதொடர்பாக, 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications