இலவச வீட்டு மனை பட்டா.. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடாத கதை.. பேராசை விஏஓவுக்கு பெருநஷ்டம்
காஞ்சிபுரம்: அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதற்காக கைதாகும் சம்பவங்கள் அண்மை காலத்தில் அதிகரித்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ரூ,15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக லஞ்சம் வாங்கினார்.. எப்படி சிக்கி கொண்டார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வீட்டு மனை பட்டா வாங்க, பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்ய, மின்சார இணைப்பு பெற, வாரிசு சான்றிதழ் பெற என பல்வேறு அரசின் சேவைகளை பெற லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதனை நிரூபிக்கும் விதமாக அடிக்கடி கைது சம்பவங்கள் நடந்து வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்த 40 வயதாகும் குமரவேலுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா கிராம கணக்கு பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்துள்ளத. இந்த நிலையில் பட்டாவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை குமரவேல் அணுகி இருக்கிறார்.
கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் பட்டாவை பதிவேற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில் இறுதியாக ரூ.15 ஆயிரம் தருவதாக உறுதி அளித்துள்ளார். எனினும் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் குமரவேல் புகார் அளித்திருக்கிறார்.
காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், குமரவேலிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனுப்பினார்கள். அவர்களின் அறிவுரைப்படி குமரவேல் விஏஓவை சந்திக்க சென்றார்.. இதன்படி, நேற்று திருமுக்கூடல்- சாலவாக்கம் சாலையில் அருங்குன்றம் அருகே குமரவேலிடம் இருந்து, கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் லஞ்ச பணத்தை பெற்றுள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன், ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை கையும் களவுமாக கைது செய்தார்கள். பின்னர் திருமுக்கூடல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை அழைத்து சென்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications